மிகப் பயங்கரமான நிலநடுக்கம் காத்திருக்கிறது.. உத்தரகாண்ட்டுக்கு எச்சரிக்கை!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய - ஆஸ்திரேலிய நிபுணர்கள் குழு உத்தரகண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த மாநிலத்தில் ஓடும் பகிரதி, அலக்நந்தா, காயி ஆகிய 3 நதி படுகைகள் உள்பட பல்வேறு இடங்களிலும் ஆராய்ச்சி மையத்திலும் அந்தக் குழு ஆய்வு செய்தது.
அதில் கடந்த 700 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் தவறுகளிள் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று இந்திய - ஆஸ்திரேலிய நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஜவகர்லால் நேரு அன்பான்ஸ்டு சயின்டிபிக் ஆய்வு மையத்தைச் சேர்ந்த ராஜேந்திரா, " கடந்த 500, 700 ஆண்டுகளாக உத்தரகண்டில் இயற்கைக்கு எதிராக நடைபெற்று வரும் நடவடிக்கைகளின் காரணமாக, நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும்", என்று தெரிவித்துள்ளார்.
முன்கூட்டியே விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையின் காரணமாக அம்மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இருப்பினும் இந்த எச்சரிக்கையினால் உயிரிழப்புகள் தடுக்கப்படும் என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
நிலநடுக்கம் குறித்து முழுமையாக கணிக்க முடியாது என்றாலும், ஏற்கனவே நிகழ்ந்த நிலநடுக்கங்களின் அடிப்படையில் ஓரளவுக்கு அதனை தெரிந்துகொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 2 ஆய்வு முடிவுகளிலும் உத்தரகண்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 8000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். முன்னதாக இமயமலைப் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications