"மாட்டுக்கறி நிறைய சாப்பிடுங்க".. பாஜக அமைச்சரின் திடீர் பேச்சு.. அப்படியே வியந்து பார்த்த மக்கள்..!
மாட்டுக்கறி சாப்பிட சொல்கிறார் அசாம் மாநில பாஜக அமைச்சர்
டிஸ்பூர்: "மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்" என்று பாஜக அமைச்சரே தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது..!
மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமில், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்..
புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கின்றனர்.. அதாவது, 126 சட்டமன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் முக்கிய காரணியாகவும் விளங்கி வருகிறார்கள்.

அஸ்ஸாம்
இந்த மாநிலத்தில், ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக இருக்கிறார்.. வடகிழக்கு ஜனநாயக கூட்டணியை உருவாக்கி பாஜகவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் இந்த பிஸ்வா சர்மாதான்... 2016 சட்டப்பேரவை தேர்தலிலும் சரி, 2019 எம்பி தேர்தலிலும் சரி, 2021 சட்டப்பேரவை தேர்தலும்சரி, அசாமில் பாஜக வெற்றி பெறுவதற்கு முக்கியமான நபரே இவர்தான்..

பாஜக
இவர் மட்டும் இல்லாவிட்டால் அங்கு பாஜக காலூன்றி இருப்பது கஷ்டம்தான்.. பாஜகவுக்கு விசுவாசமாகவே இவர் பணியாற்றியதால்தான், முதல்வர் பதவி அவரை இந்த முறை தேடி வந்தது... முதல்வராக சர்மா பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடிகளை எடுத்து வருகிறார்.. அந்த வகையில், சமீபத்தில், புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடும்பக் கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.. மற்ற எல்லாரையும் விட்டுவிட்டு, சிறுபான்மை சமூக மக்களை மட்டும் குடும்ப கட்டுப்பாடு விதிகளை கடைப்பிடிக்க சொன்னது பல்வேறு தரப்பில் விவாதங்களை கிளப்பியிருந்தது.

மாட்டிறைச்சி
இந்நிலையில், மாட்டுக்கறி விவகாரம் ஒன்று வெடித்துள்ளது.. பொதுவாக பாஜக ஆளும் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பாகப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், அசாம் பாஜக அமைச்சர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இங்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருப்பவர் சன்போர் சுலாய்.. இவர் அங்கு கடந்த வாரம்தான் அமைச்சராகப் பதவி ஏற்றார்.

மாட்டிறைச்சி
இந்நிலையில் செய்தியாளர்களிடம் இவர் பேசும்போது "இந்தியா ஜனநாயக நாடு... ஜனநாயக நாட்டில் மக்கள் தாங்கள் விருப்பப்பட்டதை சாப்பிடுவதற்கு உரிமை உள்ளது... மீன், கோழிக்கறி, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை விட, மாட்டிறைச்சியை சாப்பிடுங்கள் என்று மக்களை நான் ஊக்கப்படுத்துவேன்... மாட்டிறைச்சியை அதிகமாகச் சாப்பிடுங்கள் என ஊக்கப்படுத்துவதன் மூலம் பசுவதைக்கு பாஜக தடை விதிக்கும் என்ற கருத்து மாற்றப்படும்.

மாடுகள்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் பேசி, மேகாலயாவுக்கு மாடுகளை அனுப்பி வைப்பதால், புதிய சட்டம் எந்தவிதத்திலும் மீறப்படாது என்று பேசுவேன்... இப்படிப் பேசுவதால் நான் வன்முறைக்கு ஆதரவானவன் இல்லை. நம்முடைய மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது... மேகாலயா - அசாம் மாநிலங்களுக்கு இடையே எல்லை பிரச்சனை உள்ளது.. எங்களின் எல்லை எந்தவிதத்திலும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்போம்...

மனைவி, மகள்
எதிரிகள் நம்முடைய வீட்டை தாக்கினால், உங்கள் குடும்பத்திலுள்ள மனைவி, மகள், குழந்தைகளை தாக்கினால், சுய பாதுகாப்புக்கு பதிலுக்கு நீங்களும் அவங்களை தாக்கலாம்.... அப்படித்தான் நாங்கள் எங்கள் எல்லையில் அசாம் போலீஸாருடன் மோதினோம்... இரு மாநிலங்களுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருக்கிறது. இதை விரைவில் தீர்க்க வேண்டும்... பல கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் எல்லை பிரச்னையை தீர்த்து விடுவோம் என வாக்குறுதியளித்து, யாரும் அதை செய்யவில்லை. 50 ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்கவில்லை.. என்று கூறினார் .
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்!











Click it and Unblock the Notifications