ஜம்மு காஷ்மீர்,ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு! 5 கட்டமாக நவ.25- டிச.2 வரை வாக்குப் பதிவு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25-ந் தேதி முதல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் 87, ஜார்க்கண்ட்டில் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இவற்றின் ஆயுட் காலம் முறையே ஜனவரி 19, ஜனவரி 3-ந் தேதி முடிவடைவதைத் தொடர்ந்து இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 72.25 லட்சம் வாக்காளர்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 கோடி வாக்காளர்களும் உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 10,015 வாக்குச் சாவடிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24,648 வாக்குச் சாவடிகளும் உள்ளன.
இரு மாநிலங்களிலும் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா முறை வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடம்பெறும். இரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வருகின்றன.
இவற்றுடன் டெல்லியில் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 25-ந் தே, 2வது கட்டம்- டிசம்பர் 2; 3வது கட்டம்- டிசம்பர் 9; 4வது கட்டம்- டிசம்பர் 14; 5வது கட்டம்- டிச. 20-ந் தேதி என வாக்குப் பதிவு நடைபெறும்.
முதல் கட்ட வாக்குப் பதிவான நவம்பர் 25-ந் தேதியே டெல்லியின் 3 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும்.
இரு மாநிலங்கள் மற்றும் டெல்லி இடைத்தேர்தல் வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 23-ந் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.












Click it and Unblock the Notifications