மோடிக்கு உதவிய தலைமை தேர்தல் ஆணையர்.. 'நேர ஆதாரம்' காட்டும் காங்கிரஸ்!
டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர், தனது பிரஸ்மீட்டை கூட பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரத்திற்காக தள்ளி வைத்தார் என்று பகீர் குற்றச் சாட்டை காங்கிரஸ் சுமத்தியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.
தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

திடீர் ஒத்திவைப்பு
ஆனால் இந்த செய்தியாளர் சந்திப்பில் தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. பகல் 12.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையர் அலுவலகம் பத்திரிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி இருந்தது. ஆனால் திடீரென பத்திரிகையாளர் சந்திப்பு 3 மணிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அப்போதுதான் தலைமை தேர்தல் ஆணையர் பிரஸ்மீட் செய்தார்.

மதியம் பிரச்சாரம்
நேற்று, ராஜஸ்தானில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார். மோடி மதியம் 1 மணிக்கு உரையாற்றிய நிலையில்தான், தலைமை தேர்தல் ஆணையரின் பிரஸ்மீட், மதியம் 3 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

பிரஸ் மீட் நேரம்
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் பிரதீப் சுர்ஜவாலா, இதுகுறித்து கூறுகையில், தேர்தல் ஆணையம் மதியம் 12.30 மணிக்கு பிரஸ்மீட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் அது மதியம் 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ராஜஸ்தானில் மோடி
தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்துவிடும் என்பதால் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் நடத்திக்கொண்டிருந்ததை கருத்தில் கொண்டு எனது தேர்தல் ஆணையர் தனது அறிவிப்பை ஒத்தி வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு என்று நம்பிக் கொண்டிருந்தோம். அப்படி இல்லை என்பதுபோல நடவடிக்கைகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அரசே போர்
பாஜக ஆட்சி தங்கள் மக்கள் மீது போர் தொடுத்து கொண்டுள்ளது. அரசே மக்கள் மீது போர் தொடுக்கும் அநியாயம் இந்த அரசில் தான் நடந்து வருகிறது. அத்தனை தூரம் மற்றும் கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications