மோடி மீதான 'திருமண மறைப்பு' புகார் பரிசீலனையில் உள்ளது: தேர்தல் ஆணையர் பேட்டி
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: திருமணத்தை மறைத்ததாக நரேந்திரமோடி மீது அளிக்கப்பட்டுள்ள புகாரை பரிசீலித்து வருவதாக தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் வதோதரா தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நரேந்திரமோடி, அந்த மனுவில் தனக்கு திருமணமாகியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு முந்தைய தேர்தல்களில் திருமணமாகியுள்ளதா இல்லையா என்று கேட்கப்பட்டிருந்த இடத்தை பூர்த்தி செய்யாமலே விட்டிருந்தார். இதையடுத்து தேர்தல்களின்போது உண்மைகளை மறைத்ததாக, மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்திருந்தது.
இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பணிகளை பார்வையிட இன்று வருகை தந்த தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்திடம் நிருபர்கள் அந்த புகாரின் நிலை குறித்து கேட்டனர். இதற்கு பதிலளித்த சம்பத், அந்த புகார் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications