For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்காளர்களை ஊக்கப்படுத்த புதிய யுக்தி... அதிக வாக்குப்பதிவானால் பாராட்டுச் சான்றிதழ்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில், லோக்சபா தேர்தலின் போது வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அதிக வாக்குப்பதிவாகும் மாவட்டத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க மாநிலத்தின் துணை தேர்தல் ஆணையர் அமித்ஜோதி பட்டாச்சார்யா கூறியதாவது:

வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தேர்தலின் போது ஒவ்வொரு பூத்தின் நுழைவாயிலிலும் வாக்காளர் உறுதிமொழி ஒட்டப்படும். அதிக வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

வாக்காளர்களுக்கு வழங்கும் பூத் சிலிப்பின் பின்புறத்தில் தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கை வரிகள் அச்சிடப்பட்டிருக்கும். வாக்காளர் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் பிரச்சார வரிகள் அடங்கிய ஸ்டிக்கர்கள் மாநில போக்குவரத்து வாகனங்களில் ஒட்டப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
The Election commission in West Bengal has decided to give certificates to the best polling district to encourage voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X