தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சி கூட்டம்: சுயேட்சைகள், பண விநியோகத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை தேர்தல் ஆணையம் இன்று டெல்லியில் நடத்தியது. இதில் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பண விநியோகத்தினைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்தலை அமைதியாக நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் சார்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் இன்று கூட்டப்பட்டது.

இதில் திமுக சார்பில் டி.கே.எஸ். இளங்கோவன், அதிமுக சார்பில் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தலில் தேவையற்ற முறையில் சுயேட்சைகள் போட்டியிடுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
அத்துடன் பண விநியோகம், அதிகாரிகள் தவறிழைத்தல் போன்றவற்றை தவிர்த்தல் அவசியம் என்றும் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications