For Daily Alerts
Just In
நடத்தை விதி மீறல்... ஜெ. விளக்கத்தை நிராகரித்தது தேர்தல் ஆணையம்!
ஏற்காடு இடைத் தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி புதிய திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்ததாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் விளக்கம் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸுக்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தில் பொதுவான வாக்குறுதியை மட்டுமே கொடுத்ததாக விளக்கம் அளித்திருந்தார். தேர்தல் ஆணையம் இன்று இந்த விளக்கத்தை நிராகரித்திருக்கிறது.
அத்துடன் தேர்தல் பிரசாரத்தை கவனமாக மேற்கொள்ளுமாறும் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
Comments
election commission yercaud rejects ஏற்காடு இடைத்தேர்தல் ஜெயலலிதா விதிமீறல் தேர்தல் ஆணையம் நிராகரிப்பு
English summary
EC rejects Tamil Nadu CM Jayalalithaa's defence on poll code violation, asks her to be careful not to lure voters with new schemes. PTI
Story first published: Friday, December 6, 2013, 18:19 [IST]