ஆண் குழந்தை பிறக்கும் வரை இந்தியர்கள் சும்மா இருப்பதில்லையாம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஆண் குழந்தைகள் மீதான மோகம் தொடர்ந்து இருந்து கொண்டேதான் உள்ளது என்றும், எனவே ஆண் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வரை குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதும், பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பொருளாதாரம் மட்டுமின்றி சமூக காரணிகள் குறித்தும் இதில் சில முக்கிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வரி வரம்புக்குள் வந்த மேலும் பலர்

வரி வரம்புக்குள் வந்த மேலும் பலர்

சரக்கு மற்றும் சேவை வரியால் இந்திய பொருளாராம் வளர்ந்துள்ளது. மறைமுக வரியளிப்பாளர்களிடமிருந்து கிடைக்கும் வரி 50 சதவீதம் உயர்ந்துள்ளது. சிறு வணிகர்கள் தானாக முன்வந்து பதிவு செய்வது அதிகரித்துள்ளது. 2016 நவம்பர் முதல் இதுவரை கூடுதலாக 18 லட்சம் தனிநபர் வருமான வரி செலுத்துவோர் வரி வரம்புக்குள் வந்துள்ளனர்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்திய வரலாற்றில் முதல் முறையாக, மாநிலங்கள் மேற்கொள்ளும் சர்வதேச ஏற்றுமதி கணக்கும் பொருளாதார அறிக்கையில் சேர்ந்துள்ளது. ஏற்றுமதி சிறப்பாக உள்ள மாநிலங்களில் மக்களின் வாழ்க்கைத்தரமும் சிறப்பாக இருக்கிறது. பிற மாநிலங்கள், பிற நாடுகளுடன் ஏற்றுமதி செய்யும் மாநிலங்கள் வசதி வாய்ப்புள்ள மாநிலங்களாக உள்ளனன.

ஆண் குழந்தைகள் வேண்டும்

ஆண் குழந்தைகள் வேண்டும்

ஆய்வறிக்கை கண்டறிந்த மற்றொரு முக்கியமான விஷயம், இந்திய சமூகம் ஆண் குழந்தைகள் மீது மிகுந்த மோகம் கொண்டுள்ளது. பெரும்பாலான பெற்றோர்கள், ஆண் குழந்தைகள் பிறக்கும்வரை பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். பெண் பிள்ளைகளுக்கு பிறகு பெரும்பாலானோருக்கு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

பெண்கள் வாழ்க்கைத்தரம்

பெண்கள் வாழ்க்கைத்தரம்

அதேநேரம், கடந்த பத்தாண்டுகளில் சுயமாக சம்பாதிக்கும் பெண்களின் விகிதம் மாற்றமின்றியே உள்ளது. 2005-06 முதல் 2015-16க்கு நடுவேயான காலகட்டத்தில், கூடுதலாக 13 சதவீதம் பெண்கள்தான் கல்வியறிவு பெற்றுள்ளனர். பெண்களின் கல்வியறிவு 59.4 என்ற சதவீதத்தில் இருந்து தற்போது 72.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மழை குறைவு

மழை குறைவு

விவசாய உற்பத்தி குறைந்ததற்கு, மாறுபடும் தட்பவெப்பமே காரணம். வெப்பமயமாதல் அதிகரிப்பு, மழை பொழிவு குறைவு போன்றவற்றால், விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. நீர்ப்பாசன வசதி செய்யப்படாத இடங்களை ஒப்பிட்டால், நீர்ப்பாசனம் உள்ள இடங்களில், இரண்டு மடங்கு அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. இவ்வாறு அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+