For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூனியக்காரர்கள் என்று கூறி 8 பேரை மலம் தின்ன வைத்த அக்கிரமக்காரர்கள்!

Google Oneindia Tamil News

பெர்ஹாம்பூர், ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் சூனியம் வைப்பவர்கள் என்ற சந்தேகத்தில் 2 பெண்கள் உள்பட 8 பேரை கட்டாயப்படுத்தி மனித மலம் தின்ன வைத்து ஒரு கும்பல் அட்டகாசம் செய்துள்ளது.

ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஒலப்பூர் என்ற கிராமத்தில் ஜனவரி 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மலம் உண்ண வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு மொட்டை அடித்துள்ளனர். பற்களையும் பிடுங்கி கொடூரமாக நடந்து கொண்டுள்ளது இந்தக் கும்பல்.

Eight made to eat excreta for practicing witchcraft

இதுகுறித்து பெர்ஹாம்பூர் காவல்துறை அதிகாரி சிகிதி நாயக் கூறுகையில், ஜனவரி 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் நேற்றுதான் புகார் கொடுத்தார். அதன் பேரில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேரைக் கைது செய்துள்ளோம். அதில் ஒருவர் கிராம வார்டு உறுப்பினர் ஆவார். மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

பாதிக்கப்பட்ட பலர் அந்த சம்பவத்திற்குப் பின்னர் உயிருக்குப் பயந்து கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

English summary
In a shocking incident eight persons, including two girls, were forced to eat human excreta and tonsured after their teeth were pulled by villagers in Odisha's Ganjam district following suspicions that they were practicing witchcraft. Berhampur sub-divisional police officer Chikiti B K Nayak today said the incident took place on January 18 at Olapur village but the FIR was lodged by one of the victims yesterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X