சத்தீஷ்கர்: பண்டைய கால குகை இடிந்து விழுந்ததில் 3 மாணவிகள் உட்பட 8 பேர் பலி
ராய்பூர்: சத்தீஷ்காரில், பண்டைய கால குகை ஒன்று இடிந்து விழுந்ததில் அதனை பார்வையிட்டுக் கொண்டிருந்த மாணவிகள் உட்பட பொதுமக்கள் 8 பேர் பரிதாபமாகப் பலியாகினர்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் சுராஜ்பூர் மாவட்டத்தின் பிரதாப்பூர் சாலையில் உள்ளது பில்ட்வார் குகை. பொழுதுபோக்கு மற்றும் மதசார்பான இப்பண்டைய கால குகை சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக உள்ளது.
நேற்று இக்குகையைச் சுற்றிப்பார்க்க மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் சென்றிருந்தனர். குகையின் உட்பக்கம் சுற்றிப்பார்க 11 பேர் உள்ளே சென்றுள்ளனர். ஏற்கனவே குகையின் சுவர்கள் வெடித்து இருந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் உள்ளே சென்றதும் எதிர்பாராத விதமாக குகை இடிந்து விழுந்துவிட்டது.
இதில் 8 பேர் சம்பவ இடத்திலே இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிரிழந்தனர். செல்போன் டவர் வசதியில்லாததால், காலதாமதமாகவே போலீஸ் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து இடனடியாக சம்பவப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் 8 பேரது உடலையும் மீட்டனர். மீட்பு பணி நேற்று இரவு வரை தொடர்ந்தது.
பலியானவர்களில் 3 பேர் மாணவிகள் மீதமுள்ளவர்கள் பொதுமக்கள் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications