வாக்குப்பதிவு இயந்திர கோளாறு:அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட தேர்தல் ஆணையம் முடிவு!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கும் வகையில் விரைவில் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.
டெல்லி: தற்போது நடைமுறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளதா அதை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து விரைவில் நாடு தழுவிய அளவில் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார்.
அண்மையில்,உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு நடைபெற்றுள்ளதாக பல அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின.

தில்லுமுல்லு
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோரும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். 16 எதிர்க்கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திரும்ப பெற்றுக்கொண்டு பழைய வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தேர்தல் ஆணையம் சவால்
இந்த புகார்களை மறுத்த தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியும் என்று யாராவது நிருபிக்க முடியுமா என்று சவாலும்விடுத்திருந்தது.

அனைத்துக்கட்சிக்கூட்டம்
இது தொடர்பாக நஜீம் ஜைதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கப்படும்.

புதிய மின்னணு இயந்திரங்கள்
இது தவிர யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையிலான இயந்திரங்களையும் தேர்தல் ஆணையம் வாங்கும்.இந்த இயந்திரங்கள் அடுத்து வரும் தேர்தல்களில் பயன்படுத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
மதுக்கடைகளுக்கு தேர்தல் ஆணையம் போடும் கடிவாளம்.. ஓவர் டைம் என புலம்பும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
கட்சிக்காரங்கள விட்ருங்க..கல்யாண வீட்டுக்காரங்கள புடிங்க! தேர்தல் சீசனில் முகூர்த்தம்! பாவம் மக்கள்! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications