வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே மின்சார ரயில்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வாஞ்சி மணியாச்சி – நெல்லை இடையே மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூடியது. அதில் வாஞ்சி மணியாச்சி - நெல்லை இடையே இரட்டை மின்சார ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மதுரை - வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி இடையிலும் மின்சார ரயில் பாதை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
வாஞ்சி மணியாச்சி - நாகர்கோவில் வழியாக நெல்லைக்கு இரட்டை மின் ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 1112.62 கோடி ஒதுக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
102 கி.மீ தூரத்திற்கு இரட்டை மின் ரயில் பாதை அமைக்கும் பணி அடுத்த 4 ஆண்டுகளில் முடிவடைய உள்ளது. மேலும், கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே இரட்டை மின் ரயில் பாதை அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.