அஸ்ஸாம் வெள்ளத்தால் வங்கதேசத்துக்கு அடித்து செல்லப்பட்ட இந்திய யானை...50 நாட்களுக்கு பின் பலி
டாக்கா: அஸ்ஸாம் பெருமழை வெள்ளத்தில் வங்கதேசத்துக்கு அடித்துச் செல்லப்பட்ட இந்திய யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாமில் அண்மையில் பலத்த மழை பெய்தது. இதனால் பிரம்மபுத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த பெருவெள்ளத்தில் கூட்டத்துடன் இருந்த ஒரு பெண் யானை பிரிந்து சிக்கியது. பின்னர் அது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு வங்கதேசத்தின் ஜமால்பூர் மாவட்டத்தின் கிராமத்தில் ஒதுங்கியது.
தொடர்ந்து வெள்ளத்தில் இழுத்து வரப்பட்டதால் யானை சோர்வடைந்து மயக்க நிலையை அடைந்தது. தத்தளித்தபடி மூழ்கி கொண்டிருந்த யானையைப் பார்த்த கிராம மக்கள் கயிறு மற்றும் சங்கிலியால் பிணைத்து அதை கரைக்கு கொண்டு வந்தனர்.

இது குறித்து இந்திய அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட ஒரு குழு வங்கதேசம் சென்றது. ஆனால் யானை மிகவும் பலவீனமாக இருப்பதால் யானையை உடனடியாக கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சபாரி பூங்காவில் வைத்து பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த யானை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications