மிசோரம் கல்குவாரி மலை சரிந்து விபத்து: 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு
ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி குன்று இடிந்து விழுந்ததில் சிக்கிய 15 பீகார் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடகிழக்கு மாநில கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். பொதுவாக பழங்குடி மக்களாகிய அவர்கள், மலைகளை தெய்வமாக வணங்குபவர்; இயற்கையை தெய்வமாக வணங்குபவர்கள்.

வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்படுகின்றன. உள்ளூராட்சியில் தன்னாட்சி, தனிமாநிலம் கோருதம், தனிநாடு கோருதல் ஆகியவற்றுக்காக இவர்கள் ஆயுதம் ஏந்தி உள்ளனர். அண்மைக்காலமாக இத்தகைய ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் சில பகுதிகளில் இத்தகைய ஆயுத குழுக்கள், கல்குவாரிகளிடம் தனியாக வரி வசூலித்து அனுமதிப்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மிசோரம் மாநிலத்திலும் இத்தகைய கல்குவாரிகள் அதிகம் உள்ளன. மிசோரம் மாநிலத்தின் ஹனாதியால் மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பீகார் மாநிலத்தவர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகலில் தொழிலாளர்கள் உணவுக்காக சென்றிருந்தனர்.
அதேநேரத்தில் பல தொழிலாளர்கள் கல்குவாரியின் கீழே வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல்குவாரி மலை அப்படியே மொத்தமாக இடிந்து கீழே வேலைசெய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். சமூக வலைதளங்களில் கல்குவாரி மலை அப்படியே சரிந்து மொத்தமாக கீழே விழும் வீடியோ காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே மிசோரம் கல்குவாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை மொத்தம் 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications