பெங்களூருவையும், ஐடி துறையையும் தீவைத்து கொளுத்த வேண்டும்: விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்
பெங்களூரு: தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களையும் (ஐடி), பெங்களூருவையும் தீ வைத்து கொளுத்த வேண்டும் என்று பாரத ரத்னா விருது பெற்றவரும், பிரதமருக்கான விஞ்ஞானிகள் ஆலோசனை குழு தலைவருமான சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார். பெங்களூரு நகரின் அடிப்படை மதிப்புகளை ஐடி துறை கபளீகரம் செய்து விட்டதாக கூறி தனது ஆத்திரத்தை ராவ் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் ஐடி தலைநகர், இந்தியாவின் சிலிக்கான் வேலி என்றெல்லாம் பெங்களூரு புகழப்பட காரணம், இங்கு குவிந்துள்ள பிரபல மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள்தான்.
பெங்களூருவின் லைப் ஸ்டைல், பல மாநில மக்களும் ஓரிடத்தில் குவிந்து பரவியுள்ள கலாச்சார ஊடுருவல் போன்றவற்றை அனுபவிக்க பெங்களூரை தேடி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். ஆனால் விஞ்ஞானி ராவ் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆங்கில இதழ் ஒன்றுக்கு ராவ் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இதுகுறித்து கூறியுள்ளதாவது: பெங்களூரு முன்பெல்லாம் அறிவாளிகளின் நகரமாக மதிக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்டது.
ஆனால், ஐடி துறை திடீரென பெற்ற வளர்ச்சிக்கு பிறகு இதன் பழம் பெரும் கலாச்சாரம் தகர்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறையில் மிகப்பெரும் மாற்றம் வந்துள்ளது. தூய்மையாக இருந்த பெங்களூருவில் தற்போது, எங்கு பார்த்தாலும் குப்பை. எலக்ட்ரானிக் குப்பையும் பெருகிவிட்டது.
நான் ஒரு பெருமைமிகு பெங்களூருவாசி. எனவே எனக்கு இந்த மாற்றங்கள் கண்கூடாக தெரிகின்றன. வேலை வாய்ப்புக்காக பெங்களூருவுக்கு வரும் மக்களால் நடுத்தர வர்க்கத்து குடும்பங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிவுசார் நகரம் என்ற பெருமையை பெங்களூரு இழந்து வருகிறது.
ஐடி துறை நிறுவனங்களை பெங்களூரை விட்டு சற்று தூரத்தில் அமைத்திருக்க வேண்டும். அப்போது நகருக்குள் நெருக்கடி குறைந்திருக்கும்.
"ஐடி துறையில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறுகிறீர்களே, அப்படியானால், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 பேர் மட்டுமே பிஹெச்டி படிப்பை முடிக்கிறார்களே ஏன்?" என்று வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் என்னிடம் கேட்டார். அந்த கேள்வியில் உண்மையுள்ளது. அறிவை வளர்த்துக்கொள்ளாமல் வருமானத்தை பெருக்கும் வழியை மட்டுமே பெங்களூரு தற்போது கற்றுக்கொடுத்து வருகிறது.
இந்த நகரத்தின் அடிப்படை மதிப்புகளை ஐடி துறை திருடுமானால், அப்போது பெங்களூருவை மட்டுமல்ல, ஐடி துறையையும் தீயிட்டு கொளுத்த வேண்டும். இவ்வாறு விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications