சத்தீஸ்கரில் என்கவுண்டர்.. 18 பேர் சுட்டுக்கொலை.. தலைக்கு ரூ. 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டவரும் பலி
ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது. இந்த மோதலில் நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிகம் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக உள்ளது. நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், சத்தீஸ்கரின் கன்கேர் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகள் நடமாட்டம் தென்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இந்த சண்டையில், நக்சலைட்டுகள் 18 பேர் கொல்லப்பட்டனர். சுட்டுகொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் மூத்த தலைவரும் அடங்குவார்.. தலைக்கு 25 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்த சங்கர் ராவ் உள்பட 18 நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை தரப்பில் 3 பேர் காயம் அடைந்துள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட்டுகளிடம் இருந்து ஏகே 47 ரைபிள்ஸ் உள்பட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஆப்ரேஷன் தொடங்கியதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறுகின்றன. சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைக்காக 2008 ஆம் ஆண்டு மாவட்ட ரிசர்வ் படை அமைக்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநில போலீசாரின் ஒரு பிரிவான இந்த ரிசர்வ் படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை பிரிவு இணைந்த பாதுகாப்பு படை குழு நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளது. அப்போது கன்கேர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதை அடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
அப்போது, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications