புலிக்கூண்டுக்குள் குதித்து 2 புலிகளை பயந்து ஓட வைத்த பி.இ. மாணவர்
Subscribe to Oneindia Tamil

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் யஷோநந்தன் கௌசிக். அவர் நேற்று மாலை குவாலியரில் உள்ள காந்தி விலங்கியல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அவர் இரண்டு வெள்ளை புலிகள் அடைத்து வைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்தார். குதித்தவர் அந்த இரண்டு புலிகளையும் சண்டைக்கு அழைத்தார். டான்ஸ் ஆடினார், வித்தியாசமான சைகைகள் எல்லாம் செய்தார்.
ஆனால் அவர் ஒரு மணிநேரமாக ஓவர் சீன் போட்டு புலிகளை வம்புக்கு இழுத்ததில் அவை மாணவரை பார்த்து பயந்து ஓடிவிட்டன. இதையடுத்து போலீசார் வந்து கௌசிக்கை அழைத்து சென்று விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.
அவர் இந்தூரில் உள்ள ஐபிஎஸ் அகாடமியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்(இ.சி.எஸ்.) படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications