புலிக்கூண்டுக்குள் குதித்து 2 புலிகளை பயந்து ஓட வைத்த பி.இ. மாணவர்

Subscribe to Oneindia Tamil

Engineering student jumps inside white tigers enclosure in Madhya Pradesh, scares big cats
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள விலங்கியல் பூங்காவில் இருக்கும் புலிகள் பகுதிக்குள் குதித்த என்ஜினியரிங் மாணவர் இரண்டு புலிகளை சண்டைக்கு அழைத்து அவைகளை பயமுறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஆனந்த் நகரைச் சேர்ந்தவர் யஷோநந்தன் கௌசிக். அவர் நேற்று மாலை குவாலியரில் உள்ள காந்தி விலங்கியல் பூங்காவிற்கு சென்றார். அப்போது அவர் இரண்டு வெள்ளை புலிகள் அடைத்து வைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்தார். குதித்தவர் அந்த இரண்டு புலிகளையும் சண்டைக்கு அழைத்தார். டான்ஸ் ஆடினார், வித்தியாசமான சைகைகள் எல்லாம் செய்தார்.

ஆனால் அவர் ஒரு மணிநேரமாக ஓவர் சீன் போட்டு புலிகளை வம்புக்கு இழுத்ததில் அவை மாணவரை பார்த்து பயந்து ஓடிவிட்டன. இதையடுத்து போலீசார் வந்து கௌசிக்கை அழைத்து சென்று விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.

அவர் இந்தூரில் உள்ள ஐபிஎஸ் அகாடமியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்(இ.சி.எஸ்.) படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+