Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு உயிர் கூட போக கூடாது.. காஷ்மீரில் 5 மாவட்டத்தில் இந்திய ராணுவம் எடுத்த அதிரடி முடிவு

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: பாகிஸ்தானில் எங்கும் தீவிரவாத முகாம்களை அழிக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் பல்வேறு தீவிரவாதிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பாகிஸ்தான் வழக்கம் போல் எல்லையோரத்தில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

மேலும் பீரங்கி மூலம் குண்டுகளையும் போட்டு வருகிறது. இதில் எல்லைப் பகுதியில் உள்ள காஷ்மீர் மக்கள் உயிரிழந்தனர். இதுவரை பாகிஸ்தானின் தாக்குதலுக்கு 18 பத்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 60 பேர் காயமடைந்து இருக்கிறார்கள்.

Evacuation in Jammu

இந்த நிலையில் பாகிஸ்தானில் இந்த அத்துமீறலால் ஒரு உயிர் கூட போகக்கூடாது என்ற முடிவை இந்திய ராணுவம் எடுத்திருக்கிறது. அதன்படி இந்திய ராணுவம் மற்றும் மாநில அரசு இணைந்து பாகிஸ்தான் எல்லையோரத்தில் அமைந்திருக்கும் தாக்குதல் அபாயத்தில் உள்ள 5 மாவட்ட மக்களை அப்புறப்படுத்தி வருகிறது.

இந்த மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்காக ஜம்மு ,ராஜோரி மற்றும் சாம்பா ஆகிய இடங்களில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த முகாமில் ஏராளமான மக்கள் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்பதற்காக இந்திய ராணுவம் இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்த நிலையில் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அம் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா மற்றும் துணை முதலமைச்சர் சுரேந்தர் சவுத்ரி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் பொது மக்களுக்கு தேவையான விஷயங்களை செய்து தர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா அதிகாரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் பாதுகாப்பு முகாமில் செய்யப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து கேட்டு அறிந்தார். மேலும் எந்தெந்த பகுதியில் தாக்குதல் அபாயம் இருக்கிறதோ அப்பகுதி மக்களை எல்லாம் விரைவில் அப்புறப்படுத்த உமர் அப்துல்லா உத்தரவிட்டிருக்கிறார்.

பாதுகாப்பு முகாமில் இருக்கும் மக்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த தேச மக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+