சுவிஸில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல.. அருண்ஜெட்லி விளக்கம்
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல என்று சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார்.
2017ல் இந்தியாவில் இருந்து பணம் போட்டவர்களின் எண்ணிக்கை 2016ல் போடப்பட்டதை விட 50 சதவிகிதம் அதிக ஆகும். 2016ல் சுவிஸ் வங்கியில் 3500 கோடி ரூபாய் போடப்பட்டுள்ளது. 2017 ல் மொத்தம் 7000 கோடி ரூபாய் பணம் இந்தியாவில் இருந்து சுவிஸ் வங்கியில் போடப்பட்டுள்ளது.

இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 டிசம்பர் வரை மிகவும் குறைவாக இருந்த கருப்பு பண முதலீடு 2016 டிசம்பருக்கு பின் வெகுவேகமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே பாஜக கட்சியில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டு இருந்தது. பாஜகவை சேர்ந்த பியூஸ் கோயல், அடுத்த வருட தேர்தலுக்குள் கருப்பு பணம் மொத்தமும் கொண்டு வரப்படும். மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கூறினார்.
இந்தநிலையில் நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி சுவிஸ் வங்கியில் டெபாசிட் இரட்டிப்பானது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியர்களின் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல. சிலர் நேர்மையான வழியில் சேர்த்த பணத்தையும் அங்கு சேர்த்து வைத்து இருக்கிறார்கள். சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் இருந்தால் கண்டுபிடிக்கப்படும்.
சுவிஸில் டெபாசிட் செய்தவர்கள் பலர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்தான் இப்படி பணம் போட்டு இருக்கிறார்கள். உள்நாட்டு இந்தியர்கள் பெரிய அளவில் டெபாசிட் செய்யவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications