வெறும் காம பேச்சுதான்.. மாஜி முதல்வர் மகளுக்கு வந்த ஆபாச அழைப்பு.. தில்லாக நூல் விட்ட மர்ம நபர்கள்
ஸ்ரீநகர்: 3 நாட்களாகவே காமம் தலைக்கேறிய பேச்சாகவே இருந்திருக்கிறது.. மாஜி முதல்வர் முப்தி முகமது சையத்தின் மகளின் செல்போனுக்கு மர்ம நபர்கள் இப்படி ஆபாச வார்த்தைகளை சொல்லி, தில்லாக நூல் விட்டுள்ளனர்!
ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத்.. இவரது மகள் ரூபையா.. 55 வயதாகிறது... இவர் ஒரு டாக்டர்.. சென்னை கேசவபெருமாள்புரத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் வேளச்சேரியில் கார் விமான நிலையம் வைத்திருக்கின்றார்.

பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்கள் கருதி, ருபையா குடும்பத்தினர் சென்னைக்கு வந்து குடியேறி விட்டனர்.. அவர்கள் வசிக்கும் பகுதியை சுற்றி ரோந்து போலீஸார் எப்போதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.
இந்நிலையில், யாரோ மர்ம நபர்கள் இவரது செல்போனில் தொடர்ந்து போன் செய்து வந்துள்ளனர்.. ஆபாசமாகவும் பேசியிருக்கிறார்கள்.. அந்த பேச்சு மிரட்டலாகவும் இருந்திருக்கிறது.. காமம் கொப்பளிக்கும் வார்த்தைகளாகவும் இருந்திருக்கிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து ரூபையா, அபிராமபுரம் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. தன்னுடைய செல்போனில் மிரட்டல் விடுத்த அந்த 3 நம்பர்களையும் போலீசில் தந்தார். இந்த புகாரின் அடிப்படையில், மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
ஆனால், மர்மநபர்களுக்கு இவர், முன்னாள் முதல்வர் மகள் என்றே தெரியாது.. யார் என்று தெரியாமலேயே ஆபாசமாக பேசியிருக்கிறார்கள்.. 3 நாட்களாக 3 நம்பர்களில் இருந்து காம வார்த்தைகளை அள்ளி தெளித்துள்ளனர்.. இப்போது, ரூபாயா அளித்த புகாரின் பேரில் 2 பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டாக்டர் ரூபையா முப்தியின் 3வது மகள்.. இவரைதான் கடந்த 1981ம் ஆண்டு பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர்.. அப்போது முப்தி முதல்வராக இருந்தார்.. அந்த பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.. இதையடுத்தே ரூபையாவும் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications