முன்னாள் ராணுவத்தினர் விருதுகளை திருப்பி கொடுப்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது:மனோகர் பாரிக்கர்
அரக்கோணம்: முன்னாள் ராணுவத்தினர் விருதுகளை திருப்பி கொடுப்பது என்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமேச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இராணுவ வீரர்கள் ஒரே பதவி, ஒரே ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மத்திய அரசு கடந்த வாரம் இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தங்களது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பன உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக்கொடுக்க போவதாக முன்னாள் ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அரக்கோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த விருதினை நான் கொடுக்க வில்லை. விருதுகளை திருப்பி கொடுப்பது என்பது நாட்டை இழிவுப்படுத்துவதாக உள்ளது. முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் விருதுகளை திருப்பி கொடுக்க வேண்டாம். ஒய்வூதியத்திற்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒய்வூதியத்திலும் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளோம் பிரச்சினைகள் இருந்தால் குழு அமைக்கப்படும். அக்குழுவிடம் மனு கொடுக்கலாம்.
இந்திய இராணுவத்தை பலப்படுத்த பலமான திட்டம் உள்ளது. பெரும்பாலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தலவாளப்பொருட்களை பயன்படுத்த உள்ளோம் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தலவாளப்பொருட்களை நவீனப்படுத்த திட்டம் உள்ளது.
பெண்கள் இராணுவத்தில் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களுக்கு போர் பயிற்சிப் பெற ஆட்களை தேர்வு செய்ய சில பிரச்சினைகள் உள்ளது. கப்பல் படையில் பெண்களை சேர்த்தோம் இதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க உச்ச நீதிமன்றம் சில வழிமுறைகளை கொடுத்துள்ளது. குன்னூர் வெலிங்டன் இராணுவ கல்லூரியில் 71-வது பயிற்சியின் போது 5-பெண்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications