ஆதாருக்கு எதிராக திட்டமிட்டு பிரச்சாரம்... நந்தன் நிலகேணி குற்றச்சாட்டு!
ஆதார் தகவல் திருடப்பட்டதாக திட்டமிட்டே ஆதாருக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுவதாக ஆதார் யூஐடிஏஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு : ஆதார் தகவல் திருடப்பட்டதாக திட்டமிட்டே பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஆதார் யூஐடிஏஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி குற்றம்சாட்டியுள்ளார்.
100 கோடி ஆதார் அட்டைகளின் தகவல்கள் திருடப்பட்டதாக டெல்லயில் யூஐடிஏஐ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செய்தித் தாளில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தியாளர் தன்னை வியாபாரி போல காட்டிக் கொண்டு வாட்ஸ் அப் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஆதார் விவரங்களை எடுப்பதற்கான அனுமதி பெற்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆதார் பாதுகாப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை இந்த சம்பவம் எழுப்பியது.

எளிதில் திருட முடியாது
இந்நிலையில் பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற யூஐடிஊஐ முன்னாள் தலைவர் நந்தன் நிலகேணி, ஆதார் விவரங்கள் பல பாதுகாப்பு அம்சங்களைக் கடந்து தான் சேகரித்து வைக்கப்படுகின்றன, அதனை அவ்வளவு எளிதில் திருடிவிட முடியாது.

ஆதாரை ஏற்க வேண்டும்
ஆதார் உண்மையிலேயே நல்ல முயற்சி இது பற்றி அவதூறான கருத்துகளே தொடர்ந்து பரப்பப்படுகிறது. எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் எதிர் விளைவுகளைத் தான் ஏற்படுத்தும். அனைவரும் ஆதாரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நான் கருதுகிறேன் என்று நந்தன் நிலகேணி கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றமும் ஏற்கும்
நாட்டில் சுமார் 119 கோடி மக்கள் ஆதார் அட்டை பெற்றுவிட்டனர், 55 கோடி மக்கள் தங்களது ஆதார் கார்டை வங்கிக் கணக்குடன் இணைத்துள்ளனர். உச்சநீதிமன்றம் ஆதாரில் தனி மனித விவரங்கள் பாதுகாப்பாக இருப்பதை ஏற்கும் என நம்புவதாக நிலகேணி தெரிவித்துள்ளார்.

ஆதார் எண்ணை பகிர வேண்டாம்
தற்போது ஆதார் அட்டைக்கென வெர்ச்சுவல் ஐடி என்ற ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இனி மக்கள் தங்கள் ஆதார் எண்ணை எங்கும் தெரிவிக்க வேண்டியதில்லை, வெர்ச்சுவல் ஐடி நம்பரை மட்டும் கூறினால் போதும் இதனால் ஆதார் விவரங்களுக்கான பாதுகாப்பு மேலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று நந்தன் நிலகேணி கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications