ராஜஸ்தானில் ஹோலி கொண்டாட்டத்தின் போது குண்டு வெடித்தது...14 பேர் படுகாயம் !
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது குண்டு வெடித்ததில் 14 பேர் படுகாயமடைந்தனர்.
வசந்தத்தை வரவேற்கும் விதமாக நாடு முழுவதும் மக்கள் ஹோலி பண்டிகையை வண்ணப் பொடிகளைத் தூவிக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தொல்பூர் மாவட்டத்தில் சராணி கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஹோலி கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது.
அப்போது, திடீரென அங்கு குண்டு வெடித்தது. இதில் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications