Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை 2–வது கட்ட வாக்குப்பதிவு!

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்/ ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் நாளை 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

Eyes on Lone as Valley gears up for 2nd phase

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 87 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது.

இந்த 2 மாநிலங்களிலும் 2-வது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

இங்கு தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த 2 மாநிலங்களிலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

2-வது கட்டத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை பிரிவினைவாதியாக இருந்து தேசிய நீரோட்டத்துக்கு மாறிய சாஜத் லோனே போட்டியிடும் ஹந்த்வாரா தொகுதியும், உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெண் அமைச்சர் சகினா இட்டோ போட்டியிடும் நூராபாத் தொகுதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற இருக்கும் 18 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில போலீஸ் ஐ.ஜி. சுப்ரதா சானா தெரிவித்தார்.

வாக்குப் பதிவையொட்டி 248 கம்பெனிகள் கொண்ட ராணுவத்தினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். 18 தொகுதிகளிலும் மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 15 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள 20 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இந்த தொகுதிகளில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜூன் முண்டா, மதுகோடா உள்ளிட்ட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 பேர் பெண்கள். இங்கு மொத்தம் 44 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+