ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் நாளை 2–வது கட்ட வாக்குப்பதிவு!
ஸ்ரீநகர்/ ராஞ்சி: ஜம்மு காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் நாளை 2-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் கடந்த 25-ந்தேதி நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 87 சட்டசபை தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 13 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது.
இந்த 2 மாநிலங்களிலும் 2-வது கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் காஷ்மீரில் 18 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
இங்கு தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இந்த 2 மாநிலங்களிலும் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.
2-வது கட்டத் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தவரை பிரிவினைவாதியாக இருந்து தேசிய நீரோட்டத்துக்கு மாறிய சாஜத் லோனே போட்டியிடும் ஹந்த்வாரா தொகுதியும், உமர் அப்துல்லாவின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெண் அமைச்சர் சகினா இட்டோ போட்டியிடும் நூராபாத் தொகுதியும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடைபெற இருக்கும் 18 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், அமைதியாகவும் நடப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக மாநில போலீஸ் ஐ.ஜி. சுப்ரதா சானா தெரிவித்தார்.
வாக்குப் பதிவையொட்டி 248 கம்பெனிகள் கொண்ட ராணுவத்தினர் பாதுகாப்புக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். 18 தொகுதிகளிலும் மொத்தம் 175 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் 15 லட்சத்து 35 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இதேபோல் ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள 20 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.
இந்த தொகுதிகளில் முன்னாள் முதல்வர்கள் அர்ஜூன் முண்டா, மதுகோடா உள்ளிட்ட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 பேர் பெண்கள். இங்கு மொத்தம் 44 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications