மார்க்கு தம்பி இன்னாப்பா நடக்குது 2ம் தபா பேஸ்புக்கு புட்டுகிச்சாமே!
டெல்லி: பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நேற்றிரவு இரண்டாவது முறையாக சில மணித்துளிகள் செயலிழந்த காரணத்தினால் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை அள்ளிக் குவித்து விட்டனர்.
அண்மையில் பேஸ்புக் அலுவலகத்திற்கு விசிட் அடித்துள்ள மோடிகூட சொல்லி இருந்தார் பேஸ்புக் ஒரு நாடாக இருந்திருந்தால் உலகின் ஜனத்தொகை அதிகமாக உள்ள நாடாக பேஸ்புக் இருந்திருக்கும் என்று.

அந்தளவுக்கு பேஸ்புக் இல்லாமல் தினசரி வாழ்க்கையே இல்லாமல் ஆகிவிட்டது. எனினும், மீண்டும் சில மணித்துளிகள் பேஸ்புக் செயலிழந்த காரணத்தினால் உலகளாவிய ரீதியில் பேஸ்புக் பயனாளார்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு பேஸ்புக் செயலிழந்த காரணத்தினால் வழக்கம் போல "மன்னிக்கவும், ஏதோ பிரச்சனை. பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரம் சரி செய்து விடுவோம்" என்ற அறிவிப்பு பேஸ்புக்கில் தோன்றியது.
இந்த வாரம் இடைவெளியில் இவ்வாறு பேஸ்புக் செயலிழந்தது இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சர்வர் கன்பிகரேஷனாலேயே பேஸ்புக் தளம் சில மணி நேரம் செயலிழந்ததாக பேஸ்புக் மன்னிப்பு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications