சிறந்த நிர்வாகத்திற்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்தலாம்: ஃபேஸ்புக் சிஓஓவிடம் கூறிய மோடி
டெல்லி: ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஓஓ ஷெரில் சான்ட்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் சிஓஓ ஷெரில் சான்ட்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசு மக்களை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ளும் வழிகள் குறித்து ஆலோசித்துள்ளனர்.
இது குறித்து மோடி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

ஷெரில்
ஷெரில் சான்ட்பெர்கின் சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவில் அதிகமானோர் ஃபேஸ்புக் பயன்படுத்துவதால் இந்தியா தங்கள் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான நாடு என்று அவர் தெரிவித்தார்.

அரசு
சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தும் நான் ஃபேஸ்புக் மூலம் மக்களுக்கும், அரசுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் வழிகள் மற்றும் சிறப்பான நிர்வகாத்திற்கு ஃபேஸ்புக்கை பயன்படுத்துவது குறித்து பேசினேன்.

சுற்றுலாப்பயணிகள்
ஃபேஸ்புக் மூலம் இந்தியாவுக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகளை எப்படி வரவழைப்பது என்பது குறித்தும் பேசினேன்.

காந்தி
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டாட உள்ளோம். இதற்கு ஃபேஸ்புக் எப்படி துணை புரிய முடியும் என்று சான்ட்பெர்கிடம் பேசினேன் என்று மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications