போலி வழக்கறிஞர் பட்டம்..டெல்லி முன்னாள் அமைச்சர் தோமருக்கு ஜாமின் நிராகரிப்பு..
டெல்லி: வழக்கறிஞருக்கு படிக்காமலேயே போலியாக பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங் தோமரின் ஜாமின் மனுவை சாகெட் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலி வழக்கறிஞர் பட்டம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட தோமருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டிய டெல்லி போலீசார் அவரை கைது செய்து கடந்த 9-ம் தேதி மாலை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஜிதேந்தர் சிங் தோமரை நான்கு நாள் விசாரணை காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த கெடு முடிவடைந்த நிலையில் 13-ம் தேதி அவர் மீண்டும் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். தோமர் வைத்திருந்த அத்தனை ஆவணங்களும் போலியாக உள்ளதால் அவரிடமும், அவருக்கு இந்த ஆவணங்களை தயாரித்து அளித்த பிறரிடமும் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், எனவே, தோமரின் விசாரணை காவலை மேலும் நீட்டிக்க வேண்டும் எனவும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்று தோமரின் விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி பூஜா அகர்வால், உத்தரவிட்டார்.
இந்நிலையில், அந்த 2 நாள் விசாரணை காவல் கடந்த 15-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அன்று மாலை அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். போலீஸ் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டதற்கிணங்க அவரது விசாரணை காவலை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து நீதிபதி அனுமதி அளித்தார்.
அந்த கெடுவும் முடிவடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தோமரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் மூன்றாவது முறையாக அவரது விசாரணை காவலை மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்குமாறு நீதிபதியிடம் கேட்டு கொண்டனர். இதனையடுத்து, தோமரின் விசாரணை காவலை 21-ம் தேதி (நேற்று) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் கேட்டிருந்த விசாரணை காவல் கெடு முடிவடைந்ததால் அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டும் என சாகெட் நீதிமன்றத்தில் தோமரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கிடையே, தோமரை போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரது ஜாமின் மனுவை நேற்று விசாரணைக்கு ஏற்றுகொள்ள முடியாது என அறிவித்த நீதிபதி, தோமரை மேலும் ஒருநாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இன்று இந்த ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றபோது தோமரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி, அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து, அவர் திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications