பறவை காய்ச்சலை பரப்ப பிரியாணி சாப்பிடுகிறார்கள்.. போராடும் விவசாயிகள் மீது பாஜக தலைவர் புது அட்டாக்
ஜெய்ப்பூர்: டெல்லியில் போராடும் விவசாயிகள் பறவை காய்ச்சலைப் பரப்புவதற்காகவே சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகிறார்கள் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 47ஆவது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகரில் தற்போது மோசமான வானிலை நிலவும் நிலையிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
மேலும், விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை நான்கு பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளது.

பிரியாணி சாப்பிடுகிறார்கள்
இந்நிலையில், தலைநகரில் போராடும் விவசாயிகளைக் கண்டித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மதன் திலாவர் வீடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அவர்கள் பிரியாணி, உலர்ந்த பழங்களை உண்டு மகிழ்கின்றனர். அவர்கள் தங்கள் உடைகளைக்கூட அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பல பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கக்கூடும்.

பறவை காய்ச்சல் பரவும்
திருடர்களும் கொள்ளையர்களும் கூட அவர்களுக்குள் இருக்கலாம். விவசாயிகளின் விரோதிகளும் அந்தக் கூட்டத்தில் இருக்கலாம்.பேச்சுவார்த்தை மூலமோ அல்லது பலத்தைப் பயன்படுத்தியோ அடுத்த சில நாட்களில் அரசு இவர்களை அகற்ற வேண்டும். இல்லையென்றால், நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் பரவும் ஆபத்தான நிலை எழக்கூடும் என்று நான் கருதுகிறேன்" என்றார்.

காங்கிரஸ் தாக்கு
மதன் திலாவரின் இந்த சர்ச்சை கருத்திற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா, இவை பாஜகவின் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன என்று விமர்சித்தார். மேலும், இதுபோன்ற கருத்துக்கள் வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டுள்ள டோட்டாஸ்ரா, "நமக்காகக் கடினமாக உழைத்து உணவை வழங்கும் இவர்கள், பறவைக் காய்ச்சலைப் பரப்புகின்றனர் என்று எப்படிக் கூறலாம்?" என்று தெரிவித்தார்.

காலிஸ்தான் ஆதரவாளர்கள்
ஏற்கனவே, கேரளா, ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், மதன் திலாவர் இந்த விமர்சனத்தை முன் வைத்துள்ளார். முன்னதாக, டெல்லியில் போராடும் விவசாயிகள் காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்றும் சிலர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications