For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடிகை ஜெயா பச்சனின் பயிர்கள் சேதம்: வங்கி கணக்கை துவங்கி ரூ. 13,000 நஷ்ட ஈடு வழங்கிய ம.பி. அரசு

By Siva
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தில் விவசாயிகளிக்கு அளிக்கப்பட்ட நஷ்ட ஈடு பாலிவுட் நடிகை ஜெயா பச்சனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

'Farmer' Jaya Bachchan gets compensation for crop loss

மத்திய பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பெய்த மழை மற்றும் வீசிய புயலால் பயிர்கள் சேதம் அடைந்தது. இதையடுத்து மாநில அரசு விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடிவு செய்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் அரசு நஷ்ட ஈட்டை செலுத்தியது.

இந்நிலையில் பாலிவுட் நடிகை ஜெயா பச்சனுக்கு சொந்தமாக சேவனியா கோண்ட் கிராமத்தில் உள்ள 6 ஏக்கர் நிலத்தில் பயிர்கள் சேதம் அடைந்ததால் அவருக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.

அவரது வங்கிக் கணக்கு எண் தெரியாததால் அரசே அவரது பெயரில் கூட்டுறவு வங்கியில் ஒரு கணக்கை துவங்கி அதில் ரூ.13 ஆயிரம் செலுத்தியுள்ளது.

நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Madhya Pradesh government has given compensation to the farmers whose crops got damaged due to unseasonal rain and hailstorm earlier this year. Those who received compensation includes Bollywood actress Jaya Bachchan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X