ஆண்டவா மோடிக்கு நல்ல புத்தி கொடுப்பா.. கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்!
கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், காது கொடுத்து கேட்கவும் மோடிக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கை, கால்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட
டெல்லி: ஆண்டவனே பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கை, கால்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 23 நாள்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

தொடரும் போராட்டம்
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

தலைகீழாக நின்று போராட்டம்
இந்நிலையில் நேற்று விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் என ஆதரவு அளித்து வருகின்றனர்.

23வது நாளாக
விவசாயிகளின் போராட்டம் 23-ஆவது நாளை இன்று எட்டியது. இந்நிலையில், பிரதமர் மோடி மௌனத்தை களைய வேண்டும் என்பதற்காக வெட்ட வெயிலில் கை, கால்களை கட்டிக் கொண்டு சாலையில் உருண்டு புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நல்ல புத்தி கொடுப்பா
அப்போது விவசாயிகள் கூறுகையில், கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே போராடியே எங்கள் உயிர் போவதற்கு முன்னர் மோடிக்கு நல்ல புத்தியை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications