ஆண்டவா மோடிக்கு நல்ல புத்தி கொடுப்பா.. கை, கால்களை கட்டிக் கொண்டு விவசாயிகள் போராட்டம்!
கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவும், காது கொடுத்து கேட்கவும் மோடிக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கை, கால்களை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட
டெல்லி: ஆண்டவனே பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கை, கால்களைக் கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் பயிர்க் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி நதி நீர் மேலாண்மை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கடந்த 23 நாள்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு வழிகளில் போராட்டம் நடத்தியும் அவர்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. இந்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

தொடரும் போராட்டம்
இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் தள்ளுபடி செய்தால் மட்டும் போதாது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் தள்ளுபடி செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர்.

தலைகீழாக நின்று போராட்டம்
இந்நிலையில் நேற்று விவசாயிகள் போராட்டக் குழுவைச் சேர்ந்த சிலர் தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களின் போராட்டத்துக்கு மாணவர்கள், இளைஞர்கள் என ஆதரவு அளித்து வருகின்றனர்.

23வது நாளாக
விவசாயிகளின் போராட்டம் 23-ஆவது நாளை இன்று எட்டியது. இந்நிலையில், பிரதமர் மோடி மௌனத்தை களைய வேண்டும் என்பதற்காக வெட்ட வெயிலில் கை, கால்களை கட்டிக் கொண்டு சாலையில் உருண்டு புரண்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நல்ல புத்தி கொடுப்பா
அப்போது விவசாயிகள் கூறுகையில், கடந்த 23 நாள்களாக போராடி வரும் எங்களை மத்திய அரசு ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எனவே போராடியே எங்கள் உயிர் போவதற்கு முன்னர் மோடிக்கு நல்ல புத்தியை ஆண்டவன் கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications