காந்தி நேசித்த விவசாயிகளை.. தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு
டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
டெல்லி: டெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள்.
பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருக்கிறார்கள்.
இந்த பேரணி இன்று டெல்லிக்குள் நுழையும் போது, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் அவர்கள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதன் வீடியோ வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த பேரணியில் 5000க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
[ ரூ.100 கோடி மதிப்புள்ள சிலைகள் கைப்பற்றப்பட்ட விவகாரம்.. ரன்வீர்ஷா பண்ணை வீட்டில் மீண்டும் சோதனை! ]

எப்போது தொடங்கியது
கடந்த செப்டம்பர் 23ம் தேதி இந்த பேரணி தொடங்கியது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் தொடங்கிய இந்த பேரணி நடைபயணமாக டெல்லியில் சென்று முடிவடையும். டெல்லியில் உள்ள கிசான் காட் என்ற பகுதியில் இந்த பேரணி முடிவடையும்.
|
அமைதி பேரணி
ஒரு வாரமாக நடக்கும் இந்த பேரணி இன்று காலை வரை மிகவும் அமைதியாகவே நடந்தது. ஆனால் இன்று காலை விவசாயிகள் டெல்லிக்குள் நுழைய முற்பட்ட போது, மத்திய ரிசர்வ் போலீஸ் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. தண்ணீர் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி உள்ளது.
|
என்ன காரணம்
விவசாயிகளை டெல்லிக்குள் அனுமதிக்காததற்கு போலீஸ் விசித்திரமான காரணம் சொல்லி உள்ளது. அதன்படி விவசாயிகள் டிராக்டரில் வந்துள்ளனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பேரணி செய்பவர்கள் உள்ளே வந்தால் அசாதாரண சூழ்நிலை உருவாகும் என்று அனுமதி அளிக்க மறுத்து இருக்கிறார்கள்.
|
மோசம்
அது மட்டுமில்லாமல் போலீசார் விவசாயிகள் மீது மோசமாக தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். பல விவசாயிகள் லத்திகளால் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பலர் கடந்த இரண்டு நாட்களாக சாப்பிடாமல், நடைபயணமாக வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications