கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - ஆந்திரா அடாவடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்
கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்தை கண்டித்து சீதலகுப்பத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
சித்தூர்: கொசஸ்தலை ஆற்றின் கிளை ஆறான லங்கா ஆற்றில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டும் பணியை தொடங்கியுள்ளது. லங்கா ஆற்றின் 4 இடங்களில் ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டி வருகிறது.
சித்தூர் சீதலகுப்பத்தில் தடுப்பணைக்கான கட்டுமான பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இதற்கான பணிகளுக்காக மணல், ஜல்லி கற்கள் ஆகியவற்றை அம்மாநில அரசு கொட்டி வைத்துள்ளது.

ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சீதலகுப்பத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது, அணை கட்டினால் தமிழகத்திற்கு நீர் வரத்து பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications