தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்களாம்... ஹரியானா அமைச்சரின் 'திமிர்' பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள், கிரிமினல்கள் என்று ஹரியானா அமைச்சர் தன்கார் திமிர்த்தனமாக பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் ஆளும் பாரதிய ஜனதா அரசில் வேளாண்துறை அமைச்சராக இருக்கும் ஓபி தன்கார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Farmers who commit suicide are ‘cowards’, ‘criminals': Haryana agriculture minister Dhankar

தற்கொலை என்பது குற்றம். தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் பொறுப்பை மறந்து ஓடுகின்றனர். அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களை கோழைகள், கிரிமினல்கள் என்று தான் கூறவேண்டும். இதனால் அவர்களுக்கு ஏன் அரசு துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தன்கார் கூறினார்.

லோக்சபாவில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகள் விவகாரத்தை கையிலெடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கிப் பேசினார். இந்த நிலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹரியானா மாநில அமைச்சர் தன்கார் இப்படி விவசாயிகளுக்கு எதிராக பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது பாரதிய ஜனதாவில் விவசாயிகள் பிரிவு தலைவராக இருந்த தன்கார், விவசாயிகள் தற்கொலைக்காக அப்போதைய மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனவும் சாடியிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+