மந்திரவாதி ஆசையில் சொந்தப் பெண் குழந்தையைக் கொன்று ரத்தம் குடித்த கொடூர தந்தை!
ஜமூரா: உத்திர பிரதேசத்தில் கொடூரத்தின் உச்ச கட்டமாக தன்னுடைய மகளைக் கொன்று ரத்தத்தினைக் குடித்த தந்தையால் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரின் டேகட் மாவட்டத்தில்தான் இக்கொடுமையான நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது. கிரிஜேஷ் பால் என்கின்ற அந்தத் தந்தை தன்னுடைய ஜாமுரா கிராமத்தில் பெரிய மந்திரவாதி ஆக வேண்டும் என்று பல்வேறு பூஜைகளை நடத்தி வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமையன்று கிரிஜேஷ் தன்னுடைய 9 வயதான பெண் குழந்தையான குஷியை தன்னுடைய வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்று தலையில் கைப்பம்பால் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் அக்குழந்தையில் உடலிலிருந்து வெளிவந்த ரத்தத்தினை பிடித்துக் குடிக்க ஆரம்பித்துள்ளார்.
ரத்தத்தினை உறைய வைக்கும் இந்த நிகழ்வு நடந்தபோது அவரது மனைவியும், இரண்டு மகன்களான அமன் மற்றும் அங்கீட் ஜென்மாஷ்டமி பூஜைக்காக கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
திரும்பி வந்த மனைவி, கணவனின் இந்தக் கொடூரச் செயலைக் கண்டு சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். உடனே அங்கு திரண்ட பொதுமக்கள் அவரை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications