வெள்ளத்தில் இருந்து மகளை காப்பாற்றிய ஆந்திராவின் நிஜ 'பாகுபலி'.. வைரலாகும் போட்டோ
விசாகபட்டினம்: ஆந்திராவில் தந்தை ஒருவர் 'பாகுபாலி' திரைப்பட பாணியில் தனது மகளை காப்பாற்றப் போராடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கிராமங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த பங்கி சதிபாபு (30) உடல்நிலை சரியில்லாத தனது 6 மாத மகளை காப்பாற்ற பாகுபாலி பட பாணியில் தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Bahubali scene came real in Andhra man’s life. https://t.co/03wapd88H4 pic.twitter.com/0FxhXIg7NT
— Deccan Abroad (@DeccanAbroad) September 28, 2016
கழுத்தளவு நீரில் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தனது குழந்தையை அரச ஆரம்ப சுகாதார நிலையத்தில் பங்கி சதிபாபு சேர்த்திருக்கிறார். தனது உயிரையும் பொருட்படுத்தாது சதிபாபு மகளை தூக்கிக் கொண்டு சென்றதை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பாகுபலி திரைப்படத்தில் சிறு குழந்தையாக இருக்கும் ஹீரோவை, ரம்யா கிருஷ்ணன் கதாப்பாத்திரம், வெள்ளத்தில் இருந்து காக்க, கை மேல் தூக்கி வைத்துக்கொள்ளும் காட்சி வெகு ஃபேமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications