போலி சான்றிதழ் விவகாரம்... பீகாரில் இன்று ஒரே நாளில் 1400 ஆசிரியர்கள் ராஜினாமா
பாட்னா: பீகாரில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்களில் 1400 பேர், இன்று ஒரே நாளில் ராஜினாமா செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பணிபுரியும் தொடக்க பள்ளி ஆசிரியர்களில் பலர் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்ததாக பீகார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதற்காக வரும் 8ம் தேதி வரை அவர் கெடு விதித்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிரடியாக இன்று ஒரே நாளில் 1400 ஆசிரியர்கள் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். இத்தகவலை அம்மாநில கல்வி துறை முதன்மைச் செயலர் ஆர்.கே.மகாஜன் உறுதி செய்துள்ளார்.
மேலும், பணியில் உள்ள மற்ற தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்களையும் சரிபார்க்க அம்மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications