40+20 சட்டப்பேரவை தொகுதிகள்.. தேர்தலுக்கு தயாராகும் சத்தீஸ்கர், மிசோரம்! வேட்புமனு தாக்கல் தொடக்கம்
ராய்ப்பூர்: நவம்பர் மாதம் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கர், மிசோரம் மாநிலத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இரு மாநிலங்களிலும் மொத்தம் 60 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியில் உள்ளது. சோரம்தங்கா மாநில முதல்வராக உள்ளார். இங்கே, மிசோ தேசிய முன்னணிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதி மட்டுமே உள்ளது.
சத்தீஸ்கரை பொறுத்த அளவில், தற்போது மாநிலத்தில் ஆட்சியாளராக காங்கிரஸ் இருக்கிறது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக். 20ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடத்தப்படுகிறது. வேட்புமனுக்கள் வரும் 21ம் தேதி பரிசீலிக்கப்படுகின்றன. அதனை திரும்பப் பெற கடைசி நாள் அக்டோபர் 23 கடைசி நாளாகும்.
இது தவிர தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்ளை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10. வேட்புமனுக்கள் நவம்பர் 13ம் தேதி பரிசீலிக்கப்படுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் நவம்பர் 15. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் வரும் 21ம் தேதியும் ராஜஸ்தானில் வரும் 30ம் தேதியும் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications