ஸ்பெக்ட்ரம் வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது... ஆ.ராசா, கனிமொழி கோர்ட்டில் ஆஜர்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பின் இறுதி வாதம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் வழக்கறிஞர் மனுசர்மா முதலில் இறுதிவாதங்களை இன்று முன்வைத்தார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடுசெய்யப்பட்டதில் ஊழல் முறைகேடு நடைபெற்றது என்பது குற்றச்சாட்டு.

இந்த குற்றச்சாட்டால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராசா விலக நேரிட்டது. ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்ட பலர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர் . தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர் .
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 2011-ம் ஆண்டு ஏப்ரலில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சிபிஐ தரப்பில் இறுதி வாதம் நடைபெற்றது. அப்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை ஆ.ராசா தவறாக வழிநடத்தியதாக அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் குற்றம்சாட்டினார்.
இந்த வாதம் நிறைவடைந்ததை நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலான இறுதி வாதம் இன்று தொடங்கியது. இதையொட்டி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இன்றைய விசாரணையில் முதலில் ஆ.ராசாவின் வழக்கறிஞர் மனு சர்மா இறுதிவாதத்தை முன்வைத்தார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஓரிரு மாதங்களில் நடைபெறும் நிலையில் ஸ்பெக்ட்ரம் வழக்கின் இறுதித் தீர்ப்பு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications