நான் பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்.. தேர்தல் ஆணைய தீர்ப்பைப் பார்த்து அதிமுக எம்பி உற்சாகம்!
தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு நகலைத் தான் பார்த்துவிட்டதாக அதிமுக எம்.பி விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
Recommended Video

டெல்லி : இரட்டை இலை எடப்பாடி அணிக்கே என்கிற தேர்தல் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பு நகலை தான் பார்த்துவிட்டதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணி மற்றும் தினகரன் அணி ஆகியோரது இறுதி வாதங்களை அடுத்து இன்று தேர்தல் ஆணையம் இறுதி தீர்ப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது.

தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு ஒதுக்கிவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான நிலையில் தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இந்நிலையில், சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் இதனை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், டி.டி.வி.தினகரன் தரப்போ இதை தொடர்ந்து மறுத்துவருகிறது. இன்னும் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவையும் வெளியிடவில்லை திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள் என்று தினகரன் அணி தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் தான் தேர்தல் ஆணையத்தின் இறுதித்தீர்ப்பு நகலைப் பார்த்துவிட்டதாககவும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணிக்கே சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று உற்சாகமாகத் தெரிவித்து உள்ளார். மேலும் சிறிது நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications