உ.பி.: கான்டிராக்டரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய முன்னாள் அமைச்சரின் மகன் மீது வழக்கு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் மீது கடத்தல், மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில முன்னாள் அமைச்சர் அமர்மணி திரிபாதி. கவிஞர் மதுமிதா ஷுக்லா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அமர்மணி சிறையில் உள்ளார். அவரின் மகன் அமன்மணி திரிபாதி. அமன்மணி தன் காரை வழிமறித்து தன்னை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக கான்டிராக்டர் ஆர்.கே. பாண்டே என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
அமன்மணி தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் பாண்டே தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அமன்மணி திரிபாதி மற்றும் அவரது உதவியாளர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு நடந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அமர்மணி சமாஜ்வாடி கட்சி சார்பில் நவ்தன்வா தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications