For Daily Alerts
Just In
டெல்லி: தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
டெல்லி பவானா தொழிற்சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ, விரைவாக இரண்டாம் தளத்தில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு பரவியது என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த தீ விபத்தில் ஏழு பேர் இறந்ததை முன்பு போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்னர் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.
இந்தச் சம்பவம் குறித்து வருந்துவதாக ட்வீட் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான்: காபூலில் உள்ள ஹோட்டலில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்
- ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள்
- வினோத் ராய் ஒரு பொய்யர், வஞ்சகர், அற்பமானவர்: ஆ.ராசா
English summary
17 including 10 women were killed when fire broke out in an illegal cracker factory in outer Delhi's Bawana Industrial area on Saturday evening.