சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ.. பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
ஹைதராபாத்: டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் பரப்பு ஏற்பட்ட நிலையில் தீ அணைக்கப்பட்டு சோதனைக்குப் பிறகு ரயில் தாமதமாகக் கிளம்பியது.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து இரவு 10.30 மணியளவில் கிளம்பி, சுமார் 32 மணி நேரம் கழித்து சென்னை வந்தடையும். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காலை 7.10 மணியளவில் வந்தடையும்.

அதன்படி, ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 10.30க்கு டெல்லியில் இருந்து கிளம்பிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது இந்த ரயிலின் ஏ.சி பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது.
பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் தீயணைப்பானைக் கொண்டு தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தீ பிடித்ததை உடனடியாக கவனித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக சுமார் அரை மணி நேரம் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டு, பொறியாளர்கள் சோதனை நடத்தினர். இதையடுத்து, ரயில் மீண்டும் புறப்பட்டது. தீ விபத்து காரணமாக ரெயில் தாமதமாக சென்னை நோக்கி வந்துகொண்டிருக்கிறது.











Click it and Unblock the Notifications