திருப்பதி லட்டு தயாரிக்கும் மையத்தில் தீவிபத்து.. ரசாயனம் பட்டதில் ரூ. 20 லட்சம் லட்டுகள் சேதம்
திருபப்தி: திருப்பதியில் லட்டு தயாரிக்கும் மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தின்போது தீயணைப்பு முயற்சியின்போது ரசாயனம் பட்டதில் ரூ. 20 லட்சம் மதிப்புடைய லட்டுகள் சேதமடைந்தன.
திருப்பதி ஏழுமலையான் கோவில் வளாகத்திற்கு அருகே லட்டு தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் இணைந்து தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். அப்போது தீயணைப்பான் கருவியிலிருந்து வெளியான ரசாயனம் காரணமாக அங்கிருந்த லட்டுகள், மூலப் பொருட்கள் சேதமடைந்தன.
கிட்டத்தட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள லட்டுகள், மூலப் பொருட்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு போய் அழிக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது. தீவிபத்து காரணமாக லட்டு தயாரிக்கும் பணியும் நிறுத்தப்பட்டுள்ளது. வேறு பாதிப்பில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.