இந்தியாவில் முதல் புல்லட் ரயில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் ? அமைச்சர் சுரேஷ் பிரபு பேட்டி
டெல்லி: இந்தியா வரலாற்றின் புதிய அத்தியாயமாக முதல் புல்லட் ரயில் வரும் 2023-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
ஜப்பான் நாட்டுடன் இணைந்து மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறுகையில், இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய மாற்றத்தை கொண்டு வரும் வகையில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் வரும் 2023-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.

புல்லட் ரயிலுக்கான பணிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி முறையாக நடந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்தார். ரூ.97 ஆயிரம் கோடியில் மும்பை - அகமதாபாத் இடையே உருவாகவுள்ள இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் 508 கி.மீ நீளம் கொண்டதாகும்.இதில், கடலுக்கு அடியில் 21 கி.மீ நீளத்திற்கு சுரங்க ரயில் பாதையும் இருக்கும் என்பதால் புல்லட் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு த்ரில்லான அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகட்பட்சமாக மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இந்த புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். புல்லட் ரயிலின் திட்ட செலவு, ஒரு கி.மீக்கு, ரூ.140 கோடி என்ற அளவிலுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications