ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ.50,000 வரை கூடுதல் வரி சலுகை
டெல்லி: முதன் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை தரப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் அருண்ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறைவான வருமான வரி செலுத்துவோருக்கு 2 வரிச் சலுகைகளை அறிவித்திருந்தார்.

ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமாய் உள்ளோருக்கு ரூ3,000 வரிச்சலுகை, வீட்டு வாடகை அலவன்ஸ் பெறாத வாடகைதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ24,000 வரை கிடைத்து வந்த வரிச்சலுகை ரூ60,000 வரை உயர்த்தப்பட்டது.
இவை தவிர முதல் முறையாக வீடு வாங்குவோரின் ரூ35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டியில் ரூ50,000 கூடுதல் வரிச் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீட்டின் மதிப்பு ரூ50 லட்சத்துக்கும் அதிகமாகாமல் இருந்தால் மட்டுமே இந்த சலுகை பொருந்தும் எனவும் ஜேட்லி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications