பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருட்டு.... 5 பேர் கைது
டெல்லி: மத்திய பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக 5 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைதான ஐந்து பேரில் 2 பேர் அதிகாரிகள் ஆவர். இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர் ஒருவரிடம் விசாரணை நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

திருடப்பட்ட ஆவணங்களை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்க ஐவரும் முயற்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
திருடப்பட்ட முக்கியமான அரசு ஆவணங்கள் ஆகும். இவற்றை பிரபலமான வர்த்தக நிறுவனங்களுக்குப் பெரும் பணத்திற்கு விற்க இந்த ஐந்து பேரும் முயன்றதாக போலீஸார் கூறுகிறார்கள். மேலும் அரசின் கொள்கை வகுப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இ்நத செயலில் அவர்கள் ஈடுபட்டிருந்தனராம்.
இந்த விவகாரத்தில் கைதான ஐந்து பேரில் இரண்டு பேர் பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆவர். மற்ற 3 பேர் இடைத் தரகர்கள். இவர்கள் போக ஒரு பத்திரிகையாளரிடமும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications