உடம்பில் ஒட்டு துணி கூட இல்லை.. நீயெல்லாம் ரோமியோவா.. சரமாரி அடி.. நிர்வாணமாக்கி வெளுத்த மக்கள்!
பாலியல் தொல்லை தந்த நபரை பொதுமக்கள் அடித்து விரட்டினர்
அமிர்தசரஸ்: பெண்களிடம் வாலாட்டினால்.. இப்போதெல்லாம் பொதுமக்களே திரண்டு வந்து ரோமியோக்களின் வாலை ஒட்ட நறுக்கிவிடுகிறார்கள்.. அப்படி இந்த வருடம் மறக்க முடியாத ஒரு சம்பவம்தான் பஞ்சாப்பில் நடந்தது.. உங்க வீட்டு அடி இல்லை.. எங்க வீட்டு அடி இல்லை.. அப்படி ஒரு அடி.. காதல் நோய் பித்து பிடித்து ஒரு பெண்ணின் பின்னாடியே திரிந்த இளைஞரை ஊர்மக்கள் அடித்து, நிர்வாணமாகவே ஓட விட்டது!
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் உள்ளது கிராமம் குர்வாலி. இங்கு வசித்து வரும் அந்த இளைஞருக்கு சத்திவிண்ட் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்ணின் மீது காதல்.
ஒரு தலைகாதல் இது.. அதனால் அந்த பெண்ணை எங்கு பார்த்தாலும் லவ் டார்ச்சர் செய்து வந்துள்ளார். என்னென்னமோ ரொமான்ஸ் பண்ணி காட்டியும், விதவித முயற்சி செய்தும் அந்த இளம்பெண் இவரை திரும்பிகூட பார்க்கவில்லை.

முயற்சி
இருந்தாலும் என்னைக்காவது தன் அழகில் அந்த பெண் மயங்கி, காதலையும் ஏற்று கொள்வார் என்று இளைஞர் தன் முயற்சியை கைவிடவே இல்லை. அந்த பெண் எங்கே போனாலும் பின்னாடியே சுற்றி சுற்றி வந்துள்ளார்.. இதை அந்த பெண் சட்டை செய்யவில்லை என்றாலும், ஊர் மக்கள் இதை கவனித்துள்ளனர்.

கூச்சல்
இந்த நிலையில், தன்னுடைய செல்போன்போன் நம்பரை ஒரு பேப்பரில் எழுதி, ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது வீசினார் இளைஞர்.. இதனால் பொறுமை இழந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டுவிட்டார்.

மன்னிப்பு
உடனே ஊர் மக்களும்,அந்த பெண்ணின் சொந்தக்காரர்களும் திரண்டு அங்கே வந்துவிட்டனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சுற்றி நின்று இளைஞரை தாக்க தொடங்கினர்.. இளைஞன் மன்னிப்பு கேட்டும் ஊர்ஜனத்துக்கு ஆத்திரம் தீரவில்லை.. அதனால், இளைஞரின் டிரஸ்ஸையும் கழட்டிவிட்டனர்.. முழு நிர்வாணமான நிலையில், இளைஞர் கூனிகுறுகி உட்கார்ந்து கதறி அழுதார்.

நிர்வாணம்
உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில், இளைஞர் வந்த டூவீலரிலேயே விரட்டி ஓட விட்டனர். இளைஞனும் டிரஸ்ஸே இல்லாமல் நிர்வாணமாக அந்த டூவீலரை ஓட்டி சென்றார்... இதை அங்கிருந்தோர் வீடியோவும் எடுத்தனர்.. இதுதான் வைரலாகி வருகிறது!












Click it and Unblock the Notifications