ரகளை பயணிகளை அடக்க கைவிலங்கு, நைலான் கயிறு பயன்படுத்தும் விமான நிறுவனங்கள்
டெல்லி: வெளிநாட்டு விமானங்களை போன்று இந்திய விமானங்களிலும் சேட்டை செய்யும் பயணிகளை இருக்கையுடன் கட்டிப் போட பிளாஸ்டிக் கைவிலங்குகள் பயன்படுத்தப்பட உள்ளன.
விமானங்களில் பயணம் செய்வோரில் சிலர் திடீர் என்று இருக்கைகளில் இருந்து எழுந்து ரகளை செய்கிறார்கள். விமான சிப்பந்திகளுடன் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள். சிலர் விமானம் நடுவானில் பறக்கையில் கதவை திறக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்நிலையில் சேட்டை செய்யும் பயணிகளை இருக்கையுடன் கட்டிப் போட பிளாஸ்டிக் கைவிலங்குகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அண்மையில் அனுமதி அளித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கடந்த ஆண்டு இறுதியில் தான் அனுமதி அளித்தது. விரைவில் விமான பயணத்தின் பாதுகாப்பு கருதி ரகளை பயணிகளை கட்டுப்படுத்தும் கருவிகளை பயன்படுத்த உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயணிகளை கட்டுப்படுத்த கைவிலங்குகளை எடுத்துச் செல்வதுடன், சிப்பந்திகளுக்கு தற்காப்பு கலையும் கற்றுக் கொடுத்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் அனைத்து விமானங்களிலும் நைலான் கயிறு எடுத்துச் செல்லப்படுவதாக இன்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications