பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்ட பெருவெள்ளம்.. பல லட்சம் பேர் பரிதவிப்பு!
பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த மாநில மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
பாட்னா/ குவாஹாத்தி/ கொல்கத்தா: பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் கடும் மழை பெய்து வருவதால் வீடு, வாசல்களை இழந்து மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
பீகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
பீகாரை பொருத்தமட்டில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 69.81 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

பீகார் முதல்வர் ஆய்வு
பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் நிதீஷ் குமார் பார்வையிட்டார். சுதந்திர தின உரையில் பெருத்த வெள்ள பாதிப்பு கவலையை அளிக்கிறது. வட பீகாரில் உள்ள ஆறுகள் அபாய கட்டத்தை மீறி வெள்ள நீர் செல்கிறது. இந்த வெள்ள பாதிப்பால் ஏராளமான இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார் நிதிஷ்குமார்.

56 பேர் பலி
பீகாரில் மழை நீரில் அடித்து செல்லப்பட்டு 56 பேர் உயிரிழந்துவிட்டனர். ரயில் தண்டவாளங்கள் முழுவதும் தண்ணீரில் தத்தளித்துள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 1.61 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களில் 85,949 பேர் பல்வேறு பகுதிகளில் உள்ள 343 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாமில் நிலை மோசம்
கடந்த 10-ஆம் தேதி முதல் அஸ்ஸாமில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகிவிட்டனர். 3,192 கிராமங்களில் உள்ள 31, 59,029 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ராணுவத்தினர், தேசிய பாதுகாப்பு படையினர், சிஆர்பிஎஃப் ஆகியோர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

191 படகுகள்
அஸ்ஸாமில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க 191 படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அஸ்ஸாம் வெள்ளம் குறித்து முதல்வர் சர்வானந்த சோனோவாலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

மேற்கு வங்கம்
வடக்கு மேற்கு வங்கத்தில் 5 மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக உள்ளது. லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60,000 பேர் ஜல்பைகுரி மற்றும் அலிபுர்துவார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
மேற்கு வங்கத்தில் ஆறுகள் அபாய கட்டத்தை தாண்டி பெருக்கெடுத்து ஓடுகின்றன. மீட்பு பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications